samedi 18 février 2017

கடிதம்எழுதும் முறை

  1. அனுப்புனர், பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும்.
  2. யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது என்பதைப் பொருத்து எப்படி அழைப்பது என்று முடிவு செய்து எழுத வேண்டும்.
  3. தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் மதிப்பிற்குரிய ஐயா எனஅழைக்க வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் அன்புள்ள என அழைக்க வேண்டும். வேறு வெளியாட்களாக இருப்பின் அன்புடையீர் என அழைக்க வேண்டும்.
  4. கடிதத்தின் பொருள் என்ன என்பதை எழுத வேண்டும்.
  5. உள்ளடக்கம் - நாம் என்ன சொல்ல விரும்புகிறோமோ, அதை சுருக்கமாக எழுதிட வேண்டும்.
  6. இறுதியில் ஊர், நாள் ஆகியவற்றை கடிதத்தின் வலது மூலையில்எ ழுதிட வேண்டும்.
  7. இடது மூலையில் யாருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்பதைப்பொ றுத்து தங்களின் பணிவான, அன்பான, உண்மையான என்று எழுதிட வேண்டும்.
  8. தலைமை ஆசிரியர், மேலதிகாரி, அரசு அதிகாரி என்றால் தங்களின் பணிவான என நிறைவு செய்திட வேண்டும். பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் தங்களின் அன்பான என முடித்திட வேண்டும். வேறு வெளியாட்களாக இருப்பின் தங்களின் உண்மையான என நிறைவு செய்திட வேண்டும்.