samedi 25 janvier 2014

பழங்கள்

பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம் என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரைத் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. பழம் எனும் வார்த்தையை உச்சரிக்கும்போதே பழம் உண்ணும் முறையை உணர்த்தும் வகையில் உள்ளது .'ப' எனும்போது பழத்தை வாயில் வைக்கும்போதான உணர்வும் 'ழ'எனும்போது பழம் வாய்க்குள் செல்வது போலும் 'ம்' எனும்போது விழுங்கிய உணர்வும் தோன்றும். இந்த சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை.

பழங்களை இரு வகையாகப் பாகுபடுத்தலாம் அவையாவன சதைப்பிடிப்பான பழங்கள், உலர்ந்த பழங்கள் என்பனவாகும்.

பழங்கள் உடலுக்கு ரொம்ப நல்லது என்று அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். பழத்தில் என்னென்ன சத்துகள் இருக்கிறது கேட்டால் கூட சொல்லி விடுவார்கள். ஆனால் எந்த பழத்தில் என்ன சத்திருக்கின்றது என்று கேட்டால் உங்களால் கூறமுடியுமா?? நமது உடலுக்கு கல்சியம், இரும்புசத்து , பொஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள், விற்றமின்கள் ஆகியவை இன்றியமையாதவை. பழங்களில் இவை அதிகம் இருக்கின்றன.

புரோட்டீன் சத்துள்ள பழங்கள்
மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம் (நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.

கல்சியம் சத்துள்ள பழங்கள்
எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கல்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.

இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள்
ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .

பொட்டாசியம் சத்துள்ள பழங்கள்
ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.

பொஸ்பரஸ் சத்துள்ள பழங்கள்
மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பொஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன. மூளைக்கு அதிகளவில் வேலைக் கொடுகின்றவர்களுக்கு, பொஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும்.

பொஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Remarque : Seul un membre de ce blog est autorisé à enregistrer un commentaire.